Friday, August 7, 2009

அநுநாஸிக மற்றும் விசர்கத்தின் சிறப்புகள்

நாம் மெய்யெழுத்துக்களை பார்த்தப்பொழுது क, च , ट, त , प (க,ச,ட,த,ப) என்ற ஒவ்வொரு வரிசையின் இறுதியிலும் அநுநாஸிக என்ற எழுத்துக்களை பார்த்தோம் அவை முறையே ङ , ञ, ण , न, म‌ (ங,ஞ,ந,ன,ம) இவை ஏன் ஒவ்வொரு வரிசையின் இறுதியிலும் வந்துள்ளன , இந்த வரிசை எழுத்துக்களை சேர்த்து ஒரு வரிசை உருவாக்கியிருக்கலாமே என்று நமக்கு தோன்றும். இப்படி முறைப்படுத்தப்பட்தற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஒவ்வொரு வரிசை எழுத்துக்களையும் உச்சரிக்கும் பொழுது நாக்கு அதே இடத்தில் தான் இருக்கும் அதே போல அந்த வரிசைக்குறிய அநுநாஸிக எழுத்தை உச்சரிக்கும்பொழுதும் நாக்கு அதே இடத்தில் இருப்பதுடன் மூக்கில் இருந்து வரும் ஒலியும் சேர்ந்துக் கொள்ளும்.

ஒவ்வொரு அநுநாஸிக எழுத்தும் அந்த வரிசையிலுள்ள உயிர்மெய் எழுத்துகளுடன் மட்டுமே கூடி வரும்

ஒரு உதாரணம் காண்போம் सञ्चार‌(ஸ‌ஞ்சார) (च(ச) வரிசையில் உள்ள ञ‌(ஞ) அநுநாஸிக எழுத்து च(ச¹) உயிர்மெய்யுடன் சேர்ந்து வந்திருக்கிறது) என்பதே சரி सन्सार(ஸ‌ன்சாரம்) सण्सार‌(ஸ‌ந்சாரம்) என்பது தவறு.

மேலும் சில உதாரணங்கள்

अङ्क ( அங்க) அங்கம், உறுப்பு
शङ्कर (ஷ‌ங்கர)
पञ्च (பஞ்ச) ஐந்து
कण्ठ (கந்ட) கழுத்து

எந்த வார்தையின் இறுதியிலும் ம் என்ற எழுத்தை இணைக்க நாம் வார்த்தையின் கடைசி உயிர்மெய்மீது புள்ளி வைத்துக் குறியிடலாம், அதேநேரம் வார்த்தையின் நடுவே வரும் ம் என்ற எழுத்தை பாதி ம கொண்டே குறிக்க வேண்டும்

உதாரணம்
किं (கி¹ம்) எந்த , எதனை
मां (மாம்) என்னை

விசர்கத்தின் பயனைக் காண்போம்


விசர்க எழுத்து ( : ) ஒரு உயிருடன் சேர்ந்து வரும்பொழுது ஹ என்னும் ஒலியை தருகிறது
உதாரணம்
க்+: = கஹ என்னும் ஒலி கிடைக்கிறது. இது போல எல்லா உயிர்களுடனும் விசர்கம் சேர்ந்து உயிர்+ ஹ என்ற ஒலியைத் தருகிறது.
बालक: (பா³லக¹:) சிறுவன் இதன் உச்சரிப்பு பாலகஹ என்பதாகும்.

ஆனால் ஒரு உயிர்மெய்யுடன் விசர்க சேர்ந்து வரும்பொழுது ஹ என்ற எழுத்து உயிரெழுத்தின் ஓசையை உயிர்மெய்யுடன் இணைக்கிறது.

உதாரணம் कवि: (க¹வி:) கவிஞர் இதில் உள்ள விசர்கமானது (வி=வ் + இ) என்ற எழுத்தில் வரும் இகாராத்தால் பாதிக்கப்பட்டு ஹ என்ற ஒலியை தருவதற்கு பதிலாக ஹி என்ற ஒலியைத் தருகிறது. க¹விஹி என்பதே இந்த வார்தையின் ஒலி க¹விஹ அல்ல‌

कवे: (க¹வே:)-கவிஞருடைய‌ கவேஹே என்பதே இந்த வார்த்தையின் ஒலி கவேஹ அல்ல‌
गुरु: (கு³ரு:) கு³ருஹு என்பதே இந்த வார்த்தையின் ஒலி கு³ருஹ அல்ல‌

Thursday, August 6, 2009

உயிர்மெய் எழுத்துக்கள்







சம்ஸ்க்ருதத்தில் தமிழை போலவே உயிரெழுத்துகளும் மெய்யெழுத்துகளும் கலந்து உயிர்மெய்யெழுத்துகளாக விளங்குகின்றன. தமிழை போலவே ஒவ்வொரு மெய்யுடனும் ஒரு உயிரை சேர்த்து உயிர்மெய்யாக குறிக்க நாம் குறியீடுகளை பயன்படுத்துகிறோம். அந்த குறியீடுகளை பார்போம். நான் முன்பே உயிரெழுத்துகளை குறிக்க தமிழில் எழுத்தின் மேல் புள்ளி (எ.கா க்) உபயோகிப்பது போல சம்ஸ்க்ருதத்தில் எழுத்தின் கீழ் ஒரு கோடு இழுக்கபட்டிருக்கும் (எ.கா क् )

நாம் முதல் உயிரான क् (க்) உடன் குறிகளை இணைத்து பார்ப்போம். தமிழில் உகரத்திற்கும் ஊகரத்திற்கும் ஒவ்வொரு மெய்யிற்கும் தனித்தனி குறியீடுகள் உள்ளன ஆனால் சம்ஸ்க்ருதத்தில் எல்லா எழுத்துகளுக்கும் ஒரே உயிர்மெய் குறியீடுகள் மட்டுமே உள்ளது.






















வ்யஞ்சனம்ஸ்வரம்உயிர்மெய் குறியீடுஉயிர்மெய்யெழுத்துஉதாரணம்
क् (க்)अ‌(அ)कमलम् க¹மலம்(தாமரை)
क् (க்)(ஆ)काकाक: கா¹க¹:(காகம்)
क् (க்)इ‌ (இ)िकिकिरन:கி¹ரன:(கதிர்)
क् (க்)ई‌(ஈ)कीकीर: கீ¹ர: (கிளி)
क् (க்)उ‌(உ)कुकुकुर: கு¹கு¹ர: ( நாய்)
क् (க்)(ஊ)कूकूर्म:கூ¹ர்ம: (ஆமை)
क् (க்)(ரு)कृकृष्ण:க்¹ருஷ்ன: ( கருப்பு)
क् (க்)(ர்ரு)कॄकॄக்¹ர்ரூ (தெரிவிக்க)
क् (க்)(லு)कॢकॢप्त‌க்¹லுப்த ( ஒழுங்குமுறையில்)
क् (க்)(ல்லு)कॣ
क् (க்)(ஏ)केकेकावलाகே¹கா¹வலா ( மயில்)
क् (க்)(ஐ)कैकैरव‌கை¹ரவ ( சூதாடி)
क् (க்)ओ‌ (ஓ)कोकोकिला கோ¹கி¹லா ( குயில்)
क् (க்)(ஔ)कौकौमार‌:கௌ¹மார: (வாலிபன்)
क् (க்)अं (அ)कंभूकंप‌ பூ4க¹ம்ப ( பூகம்பம் )
क् (க்)अः‌ (அ)क: क: க: (யார் ஆன்பால்)


இதே போல ஒவ்வொரு மெய்யெழுத்தும் உயிர் குறிகளைக் கொண்டு உயிர்மெய்யாக எழுதப்படுகிறது.

இதில் ஒன்றிரண்டு விதிவிலக்குகள் இருக்கின்றன‌

र् + उ (ர் + உ = ரு) என்னும் எழுத்து रु என்று எழுதப்படுகிறது
र् + ऊ (ர்+ஊ = ரூ) என்னும் எழுத்து रू என்று எழுதப்படுகிறது

द् + ऋ (த³ +ரு= த்ரு) என்னும் எழுத்து दृ என்று எழுதப்படுகிறது
ह + ऋ (ஹ+ரு=ஹ்ரு) என்னும் எழுத்து हृ என்று எழுதப்படுகிறது

Friday, July 17, 2009

எழுத்துக்கள் - மெய்யெழுத்து


சமஸ்க்ருதத்தில் மெய்யெழுத்துக்களை வ்யன்ஜன என்பார்கள். தமிழ் போல உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே என்ற விதி சமஸ்க்ருதத்திலும் உண்டு. கூடுதல் விதியாக சம்ஸ்க்ருதத்தில் மெய்யெழுத்துக்கென்று தனியே உச்சரிப்பு கிடையாது. மெய்யெழுத்து ஸ்வரத்துடன் சேர்ந்து உயிர்மெய்யாகவே உச்சரிக்கப்படும்.

ஒரு உதாரணம் பார்போம்.

क्(க்) என்ற மெய்யெழுதிற்கென்று தனியே உச்சரிப்பு கிடையாது ஆனால் ச்வர(உயிர்)ஆகிய अ(அ)உடன் சேர்ந்து क(க‌) என்ற உயிர்மெய் ஆகிறது.

தமிழில் உயிரெழுத்தைக் குறிக்க புள்ளியை உபயோகப்படுத்துவது போல சம்ஸ்கிருதத்தில் அந்த எழுத்தின் அடியே ஒரு கோடு இழுத்து குறிப்பிடுவார்கள். இதனை ஹலந்த் என்பார்கள். இதனை நாம் क्(க்) என்ற இந்த எழுத்தின் கீழ் கானலாம்.

நாம் தற்பொழுது ஒரு முக்கியமான விஷயத்திற்கு வருவோம்.

தமிழில் மெய்யெழுத்துக்களின் உச்சரிப்பு வார்த்தைகளுக்கு ஏற்பட மாறும். 'பக்கம்' என்ற சொல்லில் உள்ள க உச்சரிப்பிற்கும் 'பகல்' என்ற சொல்லில் உள்ள க உச்சரிப்பிற்கும் வித்தியாசம் இருக்கிறது. நாம் தாய்மொழியாக தமிழை பேசி வருவதால் நமக்கு எந்தெந்த இடங்களில் மெய்யெழுத்துக்களை எப்படி உச்சரிப்பது என்பது நமக்கு தண்ணீர் பட்டப்பாடு. தொல்காப்பியத்தில் இதற்கான இலக்கண விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.

ஆனால் மற்ற இந்திய மொழிகள் அனைத்திலும் ஒவ்வொரு மெய்யெழுத்திற்கும் ஒவ்வொரு ஒலி இருக்கிறது. எழுத்துக்களின் படியே ஒலியும் உச்சரிக்கப்படுகிறது. சம்ஸ்கிருத வ்யஞ்சனங்களிலும் நாம் இதை காணலாம்.

சமஸ்கிருதத்தில் மெய்யெழுத்துக்களை ஒரு சீர்படி வரிசைப்படுத்தியுள்ளனர். இதனை நாம் க வர்கம், ச வர்கம், த வர்கம், ப வர்கம், ட‌ வர்கம் , அநுநாஸிக எழுத்துக்கள், இதர எழுத்துக்கள் எனக்கொள்ளலாம். க வர்கத்தில் ka,kha,ga,gha என்ற உச்சரிப்புகள் உடைய ககரத்திற்கான எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இதே போல ச,ப,த,ட வர்கத்திலும் நாம் உச்சரிப்புகளுக்கேற்ற எழுத்துக்களை கானலாம்.இதை தமிழில் நாம் எப்படி குறிப்பது? ஒவ்வொரு வர்கத்தின் ஒலிகளை குறிக்க தமிழில் உள்ள அந்த வர்கத்தின் பிரதான எழுத்தின் மேல் 1,2,3,4 என்று எண்கள் இட்டு நாம் ஒவ்வொரு வர்க்கத்திலும் உள்ள வடமொழி எழுத்துக்களை தமிழில் குறித்துக்கொள்வோம். உதாரணம் ka,kha,ga,gha போன்ற க வர்க உச்சரிப்புகளை முறையே க¹,க²,க³,க4 என்று குறித்துக்கொள்வோம். இதே போல எல்லா வர்கத்திற்கும் குறித்துக்கொள்வோம்.

இது தவிர மூக்கால் ஒலிக்கப்படும் அநுநாஸிக எழுத்துக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வர்கத்தின் கடைசியில் இணைக்கப்பட்டுள்ளன. அது ஏன் என்பதை நாம் பிறகு கானலாம்.

இப்பொழுது ஒவ்வொரு வர்கமாக காண்போம். மெய்யெழுத்துடன் அகரத்தை சேர்த்து உயிர்மெயெழுத்தாக நாம் உயிரெழுத்துக்களை காண்போம், ஏனெனில் உயிரெழுத்துகளுக்கு தனியே உச்சரிப்பு இல்லை.

க வர்கம்

இந்த வர்கத்தில் உள்ள எழுத்துகள் தொண்டையிலிருந்து எழும்பும் ஒலியை ஆதாரமாக கொண்டுள்ளன. இந்த வர்கத்தின் எழுத்துக்களை பார்ப்போம்






சம்ஸ்க்ருத வ்யன்ஜனம்தமிழ் மெய்ஆங்கில உச்சரிப்புஉதாரணம்ஒலிஎழுதும் முறை
க¹ kaகல்லூரி,
கண்ணீர்
க²khaகாஜா,கரகோஷம்,
கந்துவட்டி,காபந்து
க³gaபலகை, பகல்,கெட்டி
4ghaகணீர், கண்டம்
ङ‌ngaபங்கு, வங்கி
குறிப்பு
ख தமிழில் க்க என்று உச்சரித்தால் எப்படி இருக்குமோ அந்த உச்சரிப்பை கொண்டுள்ளது.
ग ஆங்கிலத்தில் ga என்ற உச்சரிப்பை ஒட்டியுள்ளது.
घ ஆங்கிலத்தில் gha என்ற உச்சரிப்பை ஒட்டியுள்ளது.

ச‌ வர்கம்.

இந்த எழுத்துக்களை உச்சரிக்கும் பொழுது நாக்கு மேல் தாடையின் முன்புறத்தை தொடும், எனவே இதை தாலு(மேல் தாடையின் முன்பகுதி) என்றும் அழைக்கின்றனர். இந்த வர்கத்தின் எழுத்துக்களை பார்ப்போம்







சம்ஸ்க்ருத வ்யன்ஜனம்தமிழ் மெய்ஆங்கில உச்சரிப்புஉதாரணம்ஒலிஎழுதும் முறை
ச¹chaசோழர், சப்பாத்தி, சானம்
ச²cha சேரன்,சாயா ,பச்சை, உச்சம்
ஜ¹jaஜனநாயகம்,ஜமீந்தார்
ஜ²jhaஜார்கண்ட், ஜார்ஜ்
ञ‌ஞ‌jnaஞானம், ஞமலி
குறிப்பு

छ தமிழில் ச்ச‌ என்று உச்சரித்தால் எப்படி இருக்குமோ அந்த உச்சரிப்பை கொண்டுள்ளது.
झ‌ தமிழில் ஜ்ஜ என்று உச்சரித்தால் எப்படி இருக்குமோ அந்த உச்சரிப்பை கொண்டுள்ளது.

ட‌ வர்கம்

இந்த எழுத்துக்களை உச்சரிக்கும் பொழுது நாக்கு மேல் தாடையின் பின்புறத்தை தொடும், எனவே இதை மூர்தா(மேல் தாடையின் பின்பகுதி) என்றும் அழைக்கின்றனர். இந்த வர்கத்தின் எழுத்துக்களை பார்ப்போம்







சம்ஸ்க்ருத வ்யன்ஜனம்தமிழ் மெய்ஆங்கில உச்சரிப்புஉதாரணம்ஒலிஎழுதும் முறை
ட‌¹taஆட்கொண்டான்,கடி,பிடி
ட‌²ttaபட்டம், நோட்டம், தோட்டம்
ட‌³daஏடு,காடு, சுடர்,இடர்.
ட‌4Ddaடம்பம், டாபர்மேன், டாக்டர்
ण‌ந‌‌4Naநட்பு, நன்றி
குறிப்பு

ठ தமிழில் ட்ட‌ என்று உச்சரித்தால் எப்படி இருக்குமோ அந்த உச்சரிப்பை கொண்டுள்ளது
ड ஆங்கிலத்தில் da என்ற உச்சரிப்பை ஒட்டியுள்ளது
ढ ஆங்கிலத்தில் dha என்ற உச்சரிப்பை ஒட்டியுள்ளது

த‌ வர்கம்

இந்த எழுத்துக்களை உச்சரிக்கும் பொழுது நாக்கு பல்லினை தொடும், எனவே இதை தந்த(பல்) என்றும் அழைக்கின்றனர். இந்த வர்கத்தின் எழுத்துக்களை பார்ப்போம்







சம்ஸ்க்ருத வ்யன்ஜனம்தமிழ் மெய்ஆங்கில உச்சரிப்புஉதாரணம்ஒலிஎழுதும் முறை
त‌1thaதப்பு,தமிழ்
த²ththaசுத்தம், நிறுத்தம்
த³dhaதரணி,தாகம், தானம்
த³dhdhaதண்டம், தண்டி (தண்டி யாத்திரை),தம்புளை(இலங்கை)
न‌ன‌naஇன்பம், தூன்
थ தமிழில் த்த‌ என்று உச்சரித்தால் எப்படி இருக்குமோ அந்த உச்சரிப்பை கொண்டுள்ளது
द ஆங்கிலத்தில் dha என்ற உச்சரிப்பை ஒட்டியுள்ளது
ध ஆங்கிலத்தில் dhdha என்ற உச்சரிப்பை ஒட்டியுள்ளது


ப வர்கம்

இந்த எழுத்துக்களை உச்சரிக்கும் பொழுது உதடுகள் ஒட்டும், எனவே இதை ஓஷ்ட(உதடு) என்றும் அழைக்கின்றனர். இந்த வர்கத்தின் எழுத்துக்களை பார்ப்போம்






சம்ஸ்க்ருத வ்யன்ஜனம்தமிழ் மெய்ஆங்கில உச்சரிப்புஉதாரணம்ஒலிஎழுதும் முறை
प‌ப¹‌‌paபால், பக்குவம்
फ‌ப²‌‌phaபணம், பல்லி
ப³‌‌baபாலாஜி,பாபா
4‌‌bhaபூமி, பாஷை
ம‌maமஞ்சள், மக்கள்
குறிப்பு

फ‌ தமிழில் ப்ப‌ என்று உச்சரித்தால் எப்படி இருக்குமோ அந்த உச்சரிப்பை கொண்டுள்ளது
ब ஆங்கிலத்தில் bha என்ற உச்சரிப்பை ஒட்டியுள்ளது
भ ஆங்கிலத்தில் bhbha என்ற உச்சரிப்பை ஒட்டியுள்ளது










சம்ஸ்க்ருத வ்யன்ஜனம்தமிழ் மெய்ஆங்கில உச்சரிப்புஉதாரணம்ஒலிஎழுதும் முறை
yaநியமம், யாது
raராமன், ரசனை
laலாபம், லட்டு
vaவண்டி, வல்லமை
ळ‌Laவள்ளுவன், தள்ளு
श‌ஷ¹shaஷங்கரன், ஷன்முகம்
ष‌ஷ²shshaவிஷம்
ஸ‌saகுஸ்தி, ஸ்வரம்
ஹ‌haஹரன், ஹோட்டல்
குறிப்பு

ळ‌ இது தமிழில் உள்ள ள என்ற எழுத்தின் உச்சரிப்பை உடையது. சில இடங்களில் இது ழ கரத்தை குறிக்கவும் உபயோகிக்கப்படுகிறது
ष‌ இது தமிழில் ஷ்ஷ என்ற உச்சரிப்பை உடையது

இப்பொழுது முழு சம்ஸ்கிருத மெய்யெழுத்துக்களையும் காண்போம். எழுத்துக்களுக்கு பக்கத்தில் அதன் தமிழ்,ஆங்கில உச்சரிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.



















































(க‌¹ ,ka)


(க‌², kha)


(க‌³, ga)

(க‌4, gha)

ङ‌
(ங‌,gna)

(ச¹ ,ca)
(ச², cha)
(ஜ¹, ga)
(ஜ² , gha)
ञ‌
(ஞ‌,nja)
(ட‌¹ ,ta)
(ட‌², tta)
(ட‌³, da)
(ட‌4, dda)
ण‌
(ந‌,Na)
(த‌¹ ,tha)
(த‌², ththa)
(த‌³, dha)
(த‌4, dhdha)
(ன‌,na)
(ப‌¹ ,pa)
(ப‌², pha)
(ப‌³, ba)
(ப‌4, bha)
(ம‌‌,ma)
(ய,ya)
(ர,ra)
(ல,la)
(வ,va)
ळ‌
(ள,La)
(ஷ¹ ,sha)‌
(ஷ² ,shsha)
(ஸ,sa)
(ஹ,ha)