Friday, August 7, 2009

அநுநாஸிக மற்றும் விசர்கத்தின் சிறப்புகள்

நாம் மெய்யெழுத்துக்களை பார்த்தப்பொழுது क, च , ट, त , प (க,ச,ட,த,ப) என்ற ஒவ்வொரு வரிசையின் இறுதியிலும் அநுநாஸிக என்ற எழுத்துக்களை பார்த்தோம் அவை முறையே ङ , ञ, ण , न, म‌ (ங,ஞ,ந,ன,ம) இவை ஏன் ஒவ்வொரு வரிசையின் இறுதியிலும் வந்துள்ளன , இந்த வரிசை எழுத்துக்களை சேர்த்து ஒரு வரிசை உருவாக்கியிருக்கலாமே என்று நமக்கு தோன்றும். இப்படி முறைப்படுத்தப்பட்தற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஒவ்வொரு வரிசை எழுத்துக்களையும் உச்சரிக்கும் பொழுது நாக்கு அதே இடத்தில் தான் இருக்கும் அதே போல அந்த வரிசைக்குறிய அநுநாஸிக எழுத்தை உச்சரிக்கும்பொழுதும் நாக்கு அதே இடத்தில் இருப்பதுடன் மூக்கில் இருந்து வரும் ஒலியும் சேர்ந்துக் கொள்ளும்.

ஒவ்வொரு அநுநாஸிக எழுத்தும் அந்த வரிசையிலுள்ள உயிர்மெய் எழுத்துகளுடன் மட்டுமே கூடி வரும்

ஒரு உதாரணம் காண்போம் सञ्चार‌(ஸ‌ஞ்சார) (च(ச) வரிசையில் உள்ள ञ‌(ஞ) அநுநாஸிக எழுத்து च(ச¹) உயிர்மெய்யுடன் சேர்ந்து வந்திருக்கிறது) என்பதே சரி सन्सार(ஸ‌ன்சாரம்) सण्सार‌(ஸ‌ந்சாரம்) என்பது தவறு.

மேலும் சில உதாரணங்கள்

अङ्क ( அங்க) அங்கம், உறுப்பு
शङ्कर (ஷ‌ங்கர)
पञ्च (பஞ்ச) ஐந்து
कण्ठ (கந்ட) கழுத்து

எந்த வார்தையின் இறுதியிலும் ம் என்ற எழுத்தை இணைக்க நாம் வார்த்தையின் கடைசி உயிர்மெய்மீது புள்ளி வைத்துக் குறியிடலாம், அதேநேரம் வார்த்தையின் நடுவே வரும் ம் என்ற எழுத்தை பாதி ம கொண்டே குறிக்க வேண்டும்

உதாரணம்
किं (கி¹ம்) எந்த , எதனை
मां (மாம்) என்னை

விசர்கத்தின் பயனைக் காண்போம்


விசர்க எழுத்து ( : ) ஒரு உயிருடன் சேர்ந்து வரும்பொழுது ஹ என்னும் ஒலியை தருகிறது
உதாரணம்
க்+: = கஹ என்னும் ஒலி கிடைக்கிறது. இது போல எல்லா உயிர்களுடனும் விசர்கம் சேர்ந்து உயிர்+ ஹ என்ற ஒலியைத் தருகிறது.
बालक: (பா³லக¹:) சிறுவன் இதன் உச்சரிப்பு பாலகஹ என்பதாகும்.

ஆனால் ஒரு உயிர்மெய்யுடன் விசர்க சேர்ந்து வரும்பொழுது ஹ என்ற எழுத்து உயிரெழுத்தின் ஓசையை உயிர்மெய்யுடன் இணைக்கிறது.

உதாரணம் कवि: (க¹வி:) கவிஞர் இதில் உள்ள விசர்கமானது (வி=வ் + இ) என்ற எழுத்தில் வரும் இகாராத்தால் பாதிக்கப்பட்டு ஹ என்ற ஒலியை தருவதற்கு பதிலாக ஹி என்ற ஒலியைத் தருகிறது. க¹விஹி என்பதே இந்த வார்தையின் ஒலி க¹விஹ அல்ல‌

कवे: (க¹வே:)-கவிஞருடைய‌ கவேஹே என்பதே இந்த வார்த்தையின் ஒலி கவேஹ அல்ல‌
गुरु: (கு³ரு:) கு³ருஹு என்பதே இந்த வார்த்தையின் ஒலி கு³ருஹ அல்ல‌

No comments:

Post a Comment