தமிழை போலவே சம்ஸ்க்ருதத்திலும் எழுத்துக்கள் உயிரெழுத்து, மெய்யெழுத்து என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தமிழுக்கும் மற்ற இந்திய மொழிகளுக்கும் எழுத்துமுறையில் ஒரு மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. அதை நாம் மெய்யெழுத்து பற்றி படிக்கும்பொழுது பார்க்கலாம். முதலில் நாம் உயிரெழுத்துக்களை காண்போம்.உயிரெழுத்து
உயிரெழுத்துக்களை சம்ஸ்க்ருதத்தில் ஸ்வர என்பார்கள். ஸ்வர என்றால்ஆதார சப்தம் என்று பொருள். எல்லா சப்தங்களும் இந்த ஸ்வரங்களை ஆதாரமாக கொண்டுள்ளன.சம்ஸ்க்ருதத்தில் மொத்தம் 16 ஸ்வரங்கள் உள்ளன.
கீழ்கண்ட அட்டவணையில் நாம் சமஸ்க்ருத ஸ்வரங்களையும் அதேபோல தமிழில் உள்ள எழுத்தினையும் காண்போம்
ॠ,ॡ போன்ற எழுத்துக்கள் அதிகம் வேதகால சம்ஸ்க்ருதத்தில் காணப்படுகின்றன. அவற்றை பற்றி அறிந்து கொண்டால் போதும் அதிகம் நாம் அவற்றை பயன்படுத்துவதில்லை.
அநுஸ்வர மற்றும் விசர்க எழுத்துக்களின் உச்சரிப்பு அது கூட வரும் மெய்யெழுத்தினை பொருத்து மாறும். நாம் அவற்றை பிறகு காண்போம்.
அடுத்த பாடத்தில் மெய்யெழுத்துக்களை பற்றி காண்போம்
Monday, July 13, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment